search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதி தேர்வு"

    பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு இன்றுடன் முடிவடைந்ததால், மாணவர்கள் உற்சாகமாக விடுமுறை கொண்டாட தயாராகி விட்டனர். #SummerHoliday
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் 18-ந் தேதி நடைபெறுவதால் பள்ளி இறுதி தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் இறுதி வாரத்தில் நிறைவடைந்தன.

    அதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளின் ஆண்டு இறுதி தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.

    ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 12-ந் தேதிக்குள் இறுதி தேர்வுகளை முடிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இறுதி தேர்வு நடைபெற்று வந்தது. இன்றுடன் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் விடுமுறைக்காக மூடப்படுகின்றன.

    பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் இன்று மாலை வரை செயல்படுகின்றன. நாளை முதல் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அதேபோல 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நாளை வரை தேர்வு நடைபெறுகிறது.

    இதுதவிர சி.பி.எஸ்.இ. பெரும்பாலான பள்ளிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. ஒருசில பள்ளிகள் 16-ந் தேதி வரை செயல்படுகிறது. அதனைத் தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறையாகும். அதனால் தனியார் பள்ளிகள் கூட 16-ந் தேதிக்கு செயல்படாது.

    தேர்தல் வந்ததால் முன் கூட்டியே மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் வழக்கமாக கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய விடுமுறையை விட இந்த வருடம் அதிகமாக கிடைத்துள்ளது.

    எப்போதும் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்களுக்கு 40 நாட்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 30 நாட்களும் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 50 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை கிடைத்துள்ளது.

    இதனால் மாணவர்கள் உற்சாகமாக விடுமுறை கொண்டாட தயாராகி விட்டனர்.

    கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது. அதை மீறி நடத்தும் பள்ளிகள் மீது கல்வித்துறை நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வரும் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு இப்போதே சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை உறுதி என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #SummerHoliday

    1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. #SchoolExamDate #Holidays
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பதவியேற்ற பின்னர் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக புதிய பாடத்திட்டம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக சீருடைகள் அறிமுகம் என கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில் 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும், அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையாகவும் பொதுத் தேர்வு தேதிகள் வகுப்புகள் தொடங்கிய அன்றே அறிவிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு கால அட்டவணையும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த சுற்றறிக்கை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு:-

    * காலாண்டு தேர்வு- செப்டம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை.

    9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை:-

    * காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை,

    * இறுதித் தேர்வு- ஏப்ரல் 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை(9-ம் வகுப்பு மட்டும்).

    செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரையில் காலாண்டு விடுமுறை காலமாகவும், டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாகவும், ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை கோடை விடுமுறை காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன் கூட்டியே விடுமுறை காலம் அறிவிக்கப்பட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர்களுடன் சுற்றுலா செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது போன்ற திட்டங்களை வகுப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
    ×